மஸ்ஜிதில்
தடுக்கப்பட்டவை
► மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது, காணாமல் போன பொருளை தேடுவது.
மஸ்ஜிதுகளை நடைபாதைகளாக பயன் படுத்துவது.
குற்றத்திற்குரிய தண்டனைகளை பள்ளிக்குள் நிறைவேற்றுவது.
மஸ்ஜிதில் அதான் சொன்ன பின்பு அவசியமின்றி தொழுகாமல் வெளியேறுவது.
மஸ்ஜிதில் நுழைந்தபின் நேரமிருப்பின் இரண்டு ரகஅத் தொழாமல் உட்காருவது.
தொழுகைக்கு செல்லும்போது அவசரமாக ஓடுவது. அவசர
►மஸ்ஜிதில் அவசியமின்றி இரு தூண்களுக்கு மத்தியில் வரிசைகளை அமைப்பது.
பூண்டு, வெங்காயம் போன்ற அருவருப்பான வாடை உள்ளவற்றை (பச்சையாக) சாப்பிட்ட பின் மஸ்ஜிதுக்குள் நுழைவது.
பிற முஸ்லிம்களுக்கு இடையூறு தருபவற்றை எடுத்துக் கொண்டு மஸ்ஜிதுக்குள் நடப்பது.
ஷரீஅத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்வதை தடுப்பது.
பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது வாசனை பொருள்களைப் பயன்படுத்துவது.
► மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கும் நாள்களில் மனைவியுடன் கூடுவது.
மஸ்ஜிதுகளை போட்டிக்காகவும், பெருமைக் காகவும் கட்டுவது.
சிகப்பு நிறத்தைக் கொண்டோ அல்லது மஞ்சள் நிறத்தை கொண்டோ மஸ்ஜிதுகளை அலங்கரிப்பது.
தொழுபவரின் சிந்தனையை திருப்பும் அளவுக்கு மஸ்ஜிதுகளில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வது.
ஜனாஸாவில்
தடுக்கப்பட்டவை
கப்ருகளை கற்களைக் கொண்டு கட்டுவது.
அதைச் சுற்றிலும் மதில் கட்டுவது அல்லது மற்ற கப்ருகளைவிட உயர்த்துவது.
கப்ருகளின் மேல் உட்காருவது.
செருப்புகளை அணிந்து கப்ருகளுக்கு மத்தியில் நடப்பது.
கப்ருகளில் அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரை எழுதுவது.
► கப்ருகளைத் தோண்டுவது.
கப்ருகளை பள்ளிவாயிலாக மாற்றுவது.
ஜனாஸா தொழுகையைத் தவிர மற்ற தொழுகைகளை கப்ருகளுக்கு அருகில் தொழுதல்.
►இறந்தவருக்காக மூன்று நாள்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிப்பது. (ஆனால் கணவன் இறந்துவிட்டால் பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.)
கணவன் இறந்துவிட்ட பெண் (இத்தா காலம் வரை) நறுமணம், சுர்மா, மருதாணி, நகைகள், அலங்காரமான படுத்துவது. ஆடைகளைப் பயன்
ஒப்பாரி வைப்பது.
ஒப்பாரி வைக்கத் தூண்டுவது.
அதற்காக இறந்தவர் வீட்டில் ஒன்று கூடுவது.
ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூலிக்கு அமர்த்துவது.
கன்னத்தில் அறைந்து கொள்வது.
தலைமுடியை அவிழ்த்துக் கொள்வது, விரித்துப் போட்டுக் கொள்வது.
காஃபிர்கள் முறையில் இறப்பு செய்தி அறிவிப்பது. (உதாரணமாக: துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், ஊரெங்கும் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிப்பது. அவ்வாறின்றி, பொதுவாக செய்வது கூடும்.) அறிவிப்பு
இரங்கல் கூட்டங்கள் நடத்துவது.
கருத்துகள்
கருத்துரையிடுக